புதிய பதிவுகளை மெயிலில் பெற உங்கள் இமெயில் முகவாியை உள்ளிடவும்

11 January 2017

எனது கலை செயல்பாடுகள் எதுவும் வீண் இல்லை - சே தமிழ்

அனைவருக்கும் வணக்கம் . எனது கலை செயல்பாடுகள் எதுவும் வீண் இல்லை என்பதை எனக்கு  உணர்த்தும் வகையில் சென்னையில் நடந்து முடிந்த 'வீதி விருது' வழங்கும்  விழா சுட்டிக் காட்டியிருக்கிறது . இலயோலா மாணவர்கள் அரவனைப்பு மையமும் , மாற்று ஊடக  மையமும் இணைந்து நடத்திய இவ்விழாவில் மூத்த நாட்டுப்புற கலைஞர்களுக்கும் இளம் நாட்டுப்புற கலைஞர்களுக்கும் கலைச் சேவையைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது . மதுரையிலிருந்து தேர்வு செய்யப்பட்டதில் இளம் கலைஞருக்கான 'வீதி விருது ' எனக்கு கொடுக்கப்பட்டது .  நான் முதல் முறையாக வாங்கும் விருது என்பதால் சொல்வதறியா மகிழ்ச்சியை உணர்ந்தேன் .  விருதை இலயோலா கல்லூரி முதல்வரும், சான்றிதழ்களை அய்யா பேராசிரியர் காளீஸ்வரன் அவர்களும் வழங்கினர். 
இவ்விருதிற்கு என்னை தேர்வு செய்து கெளரவித்த அய்யா காளீஸ்வரன் அவர்களுக்கும் , பரிந்துரை செய்த தம்பி 'மதிச்சியம் பாலா ' அவர்களுக்கும் நன்றிகள் பல.

No comments:

தினமொரு வாி

உன் அயலானை நேசி,

ஆனால், வேலியை எடுத்து விடாதே...