இளைய பாரதம் நிகழ்சியில் சே தமிழ்
மதிப்பிற்குரியோர்களே வணக்கம்! எனது இலக்கு நோக்கிய கலைப் பயணத்தில் நேற்று அகில இந்திய வானொலி நிலையத்தின் துணைப் பிரிவான மதுரை F.m. 103.3-ல் இரண்டாவது முறையாக 'இளைய பாரதம் ' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாட்டுப்புறக் கலை மற்றும் இசையின் மேன்மை குறித்தும் செவ்வியல் கலைக்கு - நாட்டுப்புறக் கலை, இசை இணையானதே என்பதை விவாதிக்கவும், பறை இசைக்கருவியில் நிரூபித்துக் காண்பிக்கவும் நேற்று (10.04.2016) வாய்ப்பு கிடைத்தது. அத்துடன் கவிஞர் பெரு. பழனிச்சாமியும் (Mku) கவிதை அரங்கில் பங்கேற்று இளைஞர்களுக்குக் கருத்துள்ள கவிதைகளையும் எடுத்துரைத்தார். இத்தகைய வாய்ப்பினை நல்கிய ஜெயச்சந்திரன், (mku) சுருதி, (MKU) நெல்லை அழகிய நம்பி (அ.இ.வா) ஆகியோர்களுக்கு நன்றிகள் பல...
No comments:
Post a Comment