புதுவைப் பல்கலைக்கழகத்தில் சே தமிழ் (தமிழா் திருநாள்)
அன்பிற்குரியோர்களுக்கு வணக்கம்! புதுவைப் பல்கலைக்கழகத்தில் (Pondichery
central university) 'தமிழர் திருவிழா ' எனும் தலைப்பில் தமிழ்த்துறை
மாணவர்களது ஒருங்கிணைப்பில் அனைத்து மாணவர்களும் இணைந்து வருடம் ஒருமுறை
கலை நிகழ்வுடன் விழாவை நடத்தி வருகின்றனர்.அதில் நாட்டுப்புறவியல் துறை
ஆய்வு மாணவர் மற்றும் நாட்டுப்புறப் பாடகர் என்ற வகையில் நாட்டுப்புறக்
கலைகளின் முக்கியத்துவம், இக்கலைகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்துப் பேச
சிறப்பு அழைப்பாளர்களில் ஒருவராக இந்த வருடம் என்னை (சே தமிழ்)
அழைத்திருந்தனர் எனும் தகவலை உங்களுடன் பகிர்வதில் நான் பெரும்
மகிழ்ச்சியடைகிறேன். முதல் முறையாக புதுவைப் பல்கலைக்கழகத்தில் இப்பெரும்
நிகழ்வில் நான் கலந்து கொண்டு உரையாற்ற வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த சமூக
விஞ்ஞானி புதியவன், புதுவைப் பல்கலைக்கழக மாணவர்களின் தலைவர் இலங்கேஸ்வரன்
ஆகியோர்க்கும், தமிழ்த்துறை மற்றும் பிற துறை ஆய்வாளர்கள், மாணவர்கள்,
பேராசிரியர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் பல...
No comments:
Post a Comment